Monday, December 22, 2025

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

 






(ஆர்.தஷ்வினி)

வாகரை அன்மித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில்  தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கு EYE power Network  அமைப்பின் ஏற்பாட்டில் கல்குடா வலயக் கல்வி  பணிப்பாளர் ஒழுங்கமைப்பில் ஆரம்ப கட்டமாக   03 பாடசாலைகளுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.


மட்/ககு/வம்மிவட்டவான் கலைமகள்  வித்தியாலயம்,மட்/ககு/மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை,மட்/ககு/கண்டலடி அருந்ததி வித்தியாலயம்  என மொத்தமாக 03 பாடசாலைகளை தெரிவு செய்து   EYE POWER NETWORK  அமைப்பின் தலைவர்  இராஜரெட்னம் நிரோசன்,மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள்,

 பாடசாலை  அதிபர்கள், பாடசாலைகளின் ஆசிரியர்கள் முன்னிலையில்      50 ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Friday, December 12, 2025

ரயில் சேவையில் பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி



இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

 
இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுத்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, இரண்டு பெண்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு ஒன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை விடுத்தார்.

மட்டு. மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பால் நிலை அடிப்படையில் வன்முறை - விழிப்பூட்டல் நிகழ்வு



மட்டக்களப்பு, மண்முனை தென் மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் பெண்களுக்கு எதிரான வண்முறையை தடுக்கும் பால் நிலை அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்கு எதிரான 16 நாள் செயல்திட்ட இறுதி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ( 11-12-2025ம் திகதி ) மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் நடை பெற்றது.


பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களின் திட்டமிடலில் , பெண்கள் அபிவிருந்தி உத்தியோகத்தர் ரி.கெளசல்யாவின் ஒழுங்குபடுத்தலில் இந்நிகழ்வு  நடை பெற்றது.

பெரன்டினா நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம் பெற்ற இந் நிகழ்வின் போது பால் நிலை, சமத்துவம் தொடர்பில் விழிப்பூட்டல் கருத்தரங்கும் இடம் பெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன், பெரன்டினா  நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ். டினேஸ், கண்காணிப்பு உத்தியோகத்தர் எம்.பி. பவிக்காந் கலந்து உள்ளிட்டோர் கொண்டு கருத்துரைகளை வழங்கினர்

இந்நிகழ்விலும் விழிப்பூட்டல் கருத்தரங்கிலும் சுமார் 50 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.














Monday, December 8, 2025

உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு !






 பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணையடி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு !


மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணையடி கிராமத்திற்கு  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  120 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால் இன்றைய தினம் ( 08 )  வழங்கி வைக்கப்பட்டது.


இந் நிகழ்விற்கு , பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கபிரதி நிதிகள் , மட்டக்களப்பு மாநகர சபை பிரதி முதல்வர் வை. தினேஷ்குமார் , கிராம சேவை உத்தியோகத்தர் , பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


இதன் போது தமது தேவையை அறிந்து பெறுமதியான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்த பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினருக்கு பொதுமக்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.


Sunday, December 7, 2025

22 வயது இளைஞன் மரணம்!!

 




மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கடந்த 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்;;ட இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்த உறவினர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு தலைமையகத்திற்கு அருகில் உள்ள வங்கியின் கிளையொன்றுக்கு முன்பாகயிருந்த துவிச்சக்கர வண்டியொன்றினை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சின்னஉப்போடையினை சேர்ந்த 22வயது இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இவரிடம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டதுடன் இவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பிலான வாக்குமூலம் பெறுவதற்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தியிருந்ததாகவும் இதன்காரணமாகவே இளைஞன் நோய்தாக்கத்தி;றகுள்ளானதாகவும் தெரிவித்து உறவினர்கள் வீதியை மறித்து போராட்டம் நடாத்தினார்கள்.

குறித்த இளைஞனின் மரண விசாரணை அறிக்கை கிடைக்கவில்லையெனவும் அது தொடர்பான அறிக்கைகிடைக்கப்பெற்றதும் விசாரணைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தபோதிலும் அதனை பொருட்படுத்தாமல் வீதியை மறித்து உறவினர்கள் போராட்டம் நடாத்தியதுடன் போக்குவரத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தனது மகன் சைக்கிளை எடுத்துச்சென்றது தொடர்பில் தகவல் கிடைத்ததும் உறவினர்களினால் அதனை மீளகொண்டு ஒப்படைத்தபோதிலும் தனது மகனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து கைதுசெய்துள்ளதாகவும் தனது மகனை பொலிஸார் தாக்கியுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

எனினும் குறித்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் இருந்ததாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுதடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த இளைஞனின் உறவினர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடாத்தியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அங்குவந்த பொலிஸார் வீதியில் நின்றவர்களை வீதிக்கு அருகில் அழைத்துச்சென்று அவர்களுடன் நிலைமையினை தெளிவுபடுத்தினர். இதன்போது சம்பவ இடத்திற்குவந்த மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எல்.லீலாரத்தன அங்குவந்து கலந்துரையாடி இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

தமது பிள்ளை வீட்டிலிருந்து பொலிஸ் நிலையம்வரும்போது நல்ல நிலையிலேயே இருந்ததாகவும் இது தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் உயிரிழந்தவரின் தாயார் தெரிவித்தார்.






Tuesday, December 2, 2025

நிவாரணபஂபொருட்கள் சேகரிப்பு!!







அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணபஂபொருட்கள் சேகரிக்கும் பணி
(02) செவ்வாய்க்கிழமை  காலை 8:30 மணியளவில் பேத்தாழை பொது நூலகத்திற்கு முன்பதாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணபஂபொருட்கள் சேகரிக்கும் பணி ஆனது இடம்பெற்று கொண்டிருக்கின்றது. 


Wednesday, November 19, 2025

உள்நாடு பிரபல உணவகமொன்றின் சாப்பாட்டில் புழுக்கள் கட்டுநாயக்கா பகுதியில் சம்பவம்!!






கொழும்பு கட்டுநாயக்க மினுவாங்கொடை பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் இன்று(19) இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


மட்டக்களப்பில் உள்ள  ஒரு சமூக  அமைப்பை சேர்ந்த இளைஞர்கள்  விமான நிலையத்துக்கு சென்று திரும்பி வரும்பொழுது  மதிய உணவுக்காக குறித்த உணவகத்தில் இருந்து உணவுகளை  சாப்பிடும் போது, கோழி இறைச்சி பொரியலுக்குள் புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.


இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக உடனடியாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து, குறித்த உணவகம் மீது சுகாதார பிரிவினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  ஊடக பிரிவுக்கு தெரிவித் திருந்தனர்.


உணவின் தரத்தினை பேணுவதில் அலட்சியம் காட்டும் உணவகங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 





 

Sunday, November 9, 2025

பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ்கள் பிரதி அமைச்சரினால் வழங்கி வைப்பு!!







மட்டக்களப்பு மற்றும் அம்பாரை ஆகிய  மாவட்டங்களில் பனைசார் கைப்பணி பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான  சான்றிதழ்கள்  வழங்கும் நிகழ்வானது பனை அபிவிருத்தி சபையின் தலைவர் இ.ரவிந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் இடம் பெற்றது. 


பெருந்தோட்டம் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாக

கலந்துகொண்ட நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத்,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு  நிகழ்வை சிறப்பித்ததுடன், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.


ஆறு மாதம் மற்றும் ஒரு வருட கற்கை நெறிகளை பூத்தி செய்த நபர்களுக்கே குறித்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சில பயனாளிகளுக்கு பணைசார் உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கான பெறுமதிவாய்ந்த உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1500 மேற்பட்ட குடும்பத்தினர்

பனை சார் கைப்பணிப் பொருட்கள் மற்றும் பெறுமதி சேர் பொருட்களை உற்பத்தி செய்து வெடிநாடுகளிற்கு ஏற்றுமதி  செய்து வருகின்றனர்.


மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரதிநிதிகள், பனை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், சுற்றுலா துறைக்கான மாவட்ட இணைப்பாளர் வணிதா செல்லப்பெருமாள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sunday, November 2, 2025

மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு திடிர் கள விஜயம்! ஞா.ஶ்ரீநேசன் எம்.பி




 

மட்டக்களப்பு - வவுணதீவு மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு கள விஜயத்தை இன்று (03) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் மேற்கொண்டார். 


குறித்த கள விஜத்தில் பிரதேச சபை தவிசார் த.கோபலப்பள்ளை, பிரதிதவிசாளர் த.டிசாந் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோருடன் பிரதேச சபை எல்லைக்குள் உட்டபடுத்தப்பட்ட கிராமங்கள் தொடர்பாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 


மேலும் எதிர்வரும் காலங்களில் வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் முன் ஆயத்தங்கள், வடிகால் துப்பரவு செய்வது தொடர்பாகவும், பிரதேச மக்கள் இலகுவாக செல்லுவதற்கும் வீதிகளுக்கான பெயர் பதாதைகள் பிரதேச சபை ஊடாக அமைக்கப்பட வேண்டும் எனவும் பிரதேச சபைக்குட்பட்ட சில எல்லை புர வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும் என கோரிக்கையளித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்



மேய்ச்சல் தரைப் பிரதேசத்தில் அத்துமீறி காடுகளை அழித்தல், பயிர்ச்செய்கை மேற்கொள்ளுதல் யார்?





 


மட்டக்களப்பில் ஏறாவூர்ப்பற்றில் உள்ள கால்நடை வளர்ப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு கித்துள் பிரதேசத்தில் உள்ள மேசக்கல் மேய்ச்சல் தரைப் பிரதேசத்திற்கு( 01) பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் சென்றிருந்தார்.


அவ்வேளையில் சுமார் 50 பண்ணையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தார்கள்.

அந்த வகையில் மேய்ச்சல் தரைப் பிரதேசத்தில் அத்துமீறி காடுகளை அழித்தல், பயிர்ச்செய்கை மேற்கொள்ளுதல் என்பவற்றால் கால் நடைகளுக்கு மேய்ச்சல் தரை குறைந்து கொண்டு செல்வதைக் குறிப்பிட்டனர்.


மேலும் தமது மேய்ச்சல் தரை நிலம் பாதுகாக்கப்படாவிட்டால் தமது கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் போய் விடும் என்பதைக் கூறியதுடன்,

எனவே சட்ட விரோதமாக காடுகளை அழிப்பதை தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.


இது தொடர்பாக அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், வனவளத் திணைக்கள பிராந்திய அதிகாரி மற்றும் கிராம சேவகர் ஆகியோருக்கு இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எடுத்துக் கூறினார்.


அவர்கள் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதனைக் கூறியிருந்தனர்.


அத்தோடு காடு அழிப்புகள் தொடர்பாக நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிடுவதற்காக காட்டு வழியினூடாகச் சென்று அவதானிக்கப்பட்டது.


இதன் போது காடு அழிப்புகள் தொடர்பாக சில பகுதிகளைப் பார்வையிட்டார், உரிய அதிகாரிகளிடம் இவ்விடயத்தை எடுத்துக் கூறியிருந்தார் .


அவர்கள் உடனடியாக அவ்விடத்திற்கு கிராம உத்தியோகத்தர், வனஜீவராசி கள உத்தியோகத்தர் ஆகியோரை அனுப்பி வைப்பதாக கூறினார்.


மட்டக்களப்பின் இயற்கை வளமான காடு அழிக்கப்பட்டால் காட்டு யானைகள் கிராமங்களை நோக்கியும், வருவதைக் தடுக்க முடியாமல் போய் விடும் இவ்விடயம் தொடர்பாக சில பயிர்ச்செய்கையாளர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது.


மேலும் சட்டப்படி பண்ணையாளர்கள் ,விவசாயிகள் நடந்த கொள்ளும்படி ஆலோசனை பாராளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்டது


உரிய நேரத்தில் கடிதங்கள் மக்களின் கையில் கிடைக்காத பின்னணி என்ன?

 






தபால் ஊழியர் இன்மையால் அல்லலுறும் பன்குடாவெளி,இலுப்படிச்சேனை,பாலர்சேனை,காயன்குடா,கொடுவாமடு, தம்பானம்வெளி,மயிலவெட்டுவான்,மாவடிஓடை, பாலர்சேனை போன்ற கிராமங்களுக்கு உரிய நேரத்தில் கடிதங்கள் சென்றடைவதில்லை இரண்டு பேர் வேலை செய்த அலுவலகத்தில் தற்போது ஒருவரே கடமை புரிகின்றார் 8 பாடசாலைகள் உள்ளது நான்கு ஆர்மி கேம் உள்ளது ஆயுள்வேதவைத்தியசாலை உள்ளது கமநல சேவை நிலையம் உள்ளது மூன்று நூலகம் உள்ளது வனவள அதிகாரி அலுவலகம் இது அனைத்துக்கும் ஒருவரே கடிதம் ஒப்படைக்க வேண்டும் காலாவதியான கடிதங்களே இவர்களின் கைகளில் கிடைக்கின்றன.



பன்குடாவெளி உப தபால் அலுவலகத்தில் இரண்டு பேர் தபால் ஊழியர்களாக கடமை புரிந்து வந்தனர் தற்போது ஒருவரே கடமை புரிகின்றான்ர் மக்களுக்கு உரிய நேரத்தில் கடிதம் கிடைப்பதில்லை என்னும் குற்றச்சாட்டை மக்கள் ஊடகத்திற்கு தெரிவித்தனர் 



Thursday, October 30, 2025

விளையாட்டுத் துறை சார் உத்தியோகத்தர்களுக்கான திறன் விருத்தி பயிற்சி!!








(ஜெபி ஜனார்த்)

கொழும்பு  தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன்  மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவின் ஏற்பாட்டில் விளையாட்டுத் துறை சார் உத்தியோகத்தர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான திறன் விருத்தி  பயிற்சி நெறி நடைபெற்றது.


 25திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையாக 04 நாட்களில் முதலாவது நாள் தைக்வோன்டோ(Takewondo) விளையாட்டு தொடர்பான பயிற்சியும் இரண்டாம் நாள் தடகள(Athletic) விளையாட்டுக்கான பயிற்சிகளும் மூன்றாம் நாள் கபடி விளையாட்டுக்கான பயிற்சிகளும் நான்காம் நாள் பளு தூக்குதல் (weight lifting) விளையாட்டுக்கான பயிற்சியும் நடைபெற்றது.


இதன் போது இப்பயிற்சியில் கலந்து கொண்ட பயிலுனர்கள்  பல்வேறு பட்ட  விடயங்களை முன்வைத்ததில் அதிகளவான நேரம் வழங்க வேண்டும் எனவும், இவ்வாறு ஒரு சில விளையாட்டுக்கள் மாத்திரம் இன்றி அனைத்து விளையாட்டுகளுக்குமான நீண்ட நாள் பயிற்சிகளை வழங்க வேண்டும் எனவும், ஏற்பாட்டுக் குழுவினரிடம் இதன் போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.


இப்பயிற்சி நெறிகள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதான கட்டட தொகுதியில் நடைபெற்றதுடன், திறன் விருத்தி பயிற்சி நெறியில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் P. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த், உதவி மாவட்ட செயலாளர் G.பிரணவன், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் M.Y.ஆதம்,  தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவன விரிவுரையாளர்கள், திணைக்கள அதிகாரிகள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான ஜீ.எல்.சஜித் ஜயலால், ஆர்.டி.ஏ.ஜீவானந்த, கே.எச்.கின்ஸ்லி குணதிலக, ஆர்.பி.பி.பிரசண்ண, எம்.ரொமேஸ் ரத்னசேகர, எம்.எல்.எம்.சஜ்னாஸ், மற்றும் எச்.ஏ.கலபனி ஆகியோர் கலந்து கொண்டதுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.